Senin, 13 September 2010

நயன்தாராவுடன் திருமணம்! பிரபுதேவா தகவல்!


காதல் விவகாரம் பற்றி கேட்கும் போதெல்லாம் சொந்த விஷயம் என்று சொல்லி கருத்து சொல்லாமல் நயன்தாரா, பிரபுதேவா இருவருமே மவுனம் காத்தனர். இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்துவிட்டதாகவும் செய்திகள்
அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில், பிரபுதேவா பேட்டி அளித்துள்ளார். மும்பை அருகில் உருமி படத்தை இயக்கிக் கொண்டிருந்த அவரிடம் நயன்தாராவுடன் காதல் பற்றி கேட்கப்பட்டது.
கேள்வி: நயன்தாரா உங்கள் வாழ்க்கையில் வர என்ன காரணம்?
பதில்: ஒரு விஷயம் அல்ல, நிறைய இருக்கிறது. நான் கஷ்டப்பட்டபோது ஆறுதலாக இருந்தார். பாலைவனத்தில் எனக்கு சோலையாக தெரிந்தார். பொதுவாக நான் முன்கோபி. என்னை மாற்றிவிட்டார். நான் முன்புபோல் இல்லை என்று என் உதவியாளர்களே சொல்கிறார்கள்.
அவர் தைரியசாலி. என்னையும் அவரைப்போல் ஆக்கி விட்டார். நிபந்தனை கள் இல்லாதது காதல் என்பதையும் அவர்தான் புரிய வைத்தார். நயன்தாரா அற்புதமான மனிதபிறவி. அவர் சார்ந்த எல்லாவற்றையுமே விரும்புகிறேன்.
கேள்வி: நயன்தாராவுக்கும், உங்களுக்கும் காதல் என தொடர்ந்து செய்திகள் வருகின்றன. அதற்கு பதில் சொல்வதை ஏன் தவிர்க்கிறீர்கள்? உங்களுக்குள் உள்ள உறவுதான் என்ன?
பதில்: என் சினிமா வாழ்க்கையில் பத்திரிகை களில் நிறைய செய்திகள் என்னைப்பற்றி வந்து விட்டன. அதுபற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. விளக்கங்கள் சொல்வதையும் தவிர்த்தேன். மறுப்புகளும் சொல்லவில்லை.
ஆனால் நயன்தாராவை பொறுத்தவரை அவர் எனக்கு விசேஷமானவர். ஆமாம். நான், நயன்தாராவை காதலிக்கிறேன். விரைவில் நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கிறோம்.
இது எனது தனிப்பட்ட சொந்த விஷயம். இதை பற்றி விளக்கமாக மீடியாக் களுக்கு சொல்ல அவசியம் இல்லை. மனம் திறந்து எதையும் பேச விருப்பமும் இல்லை.
கேள்வி: உங்களால் நயன்தாரா சினிமாவுக்கு முழுக்கு போடப்போவதாக கூறப்படுகிறதே?
பதில்: நயன்தாரா வீட்டுப்பறவை போன்றவர். ரொம்ப சிம்பிளாக இருப்பார். எந்த ஒருவளையும் காதலிப்பவன் அவளுடன் அதிக நேரத்தை செலவிடத்தான் விரும்புவான். நானும் அதற்கு விதிவிலக்கு இல்லை. நயன்தாரா சினிமாவில் நிறைய சாதித்து விட்டார். முன்னணி நடிகையாகவும் இருக்கிறார். இதுவும் எல்லோருக்கும் தெரியும்.
நாங்கள் இருவருமே ஒருவருக்கொருவர் அன்பைபகிர்ந்து கொள்ளாமல் பிசியாக இருப்பதில் அர்த்தம் இல்லை என்றார்.

Tidak ada komentar:

Posting Komentar