Sabtu, 21 Agustus 2010

லிங்குசாமிக்கு மறுத்த விஜய்

பெரிய நடிகர்களை இயக்கியவர்களுக்கு மீண்டும் அதே லெவல் கூட்டுதான் பிடிக்கும். நினைத்தால் புதுமுகங்களை கூட அறிமுகப்படுத்தலாம். என்றாலும்
அகலமான வியாபாரம். அதிர வைக்கும் சம்பளம் எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் மீண்டும் மீண்டும் பெரிய நடிகர்களின் கால்ஷீட்டுக்கு முயல்கிறார்கள். அப்படி முயன்றவர்தான் லிங்குசாமியும்.
வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், விஜய்யும் இவரும் அவ்வப்போது சந்தித்து கதை பரிமாறிக் கொண்டார்கள். இந்த விஷயம் தெரிந்துதான் சிம்புவும் வெளிப்படையாக ஒரு அறிக்கை வெளியிட்டார். என்னை ஒப்பந்தம் செய்துவிட்டு வேறொரு ஹீரோவை வைத்து படம் எடுப்பது என்ன நியாயம் என்றெல்லாம் புலம்பி தள்ளினார் அவர்.
இந்த நிலையில் லிங்குசாமியின் அடுத்த படத்தில் விஜய்தான் ஹீரோ என்ற நம்பிக்கை டமால் ஆகி விட்டதாம். காரணம், விஜய்க்கு லிங்கு சொன்ன சில கதை சுருக்கங்கள் அவரை அவ்வளவாக இம்ப்ரஸ் செய்யவில்லையாம். இயக்குனரின் அடுத்த சாய்ஸ் அஜீத் என்கிறார்கள். ஆனாலும் லிங்குசாமியை சுற்றி சுற்றி வருகிறார் கார்த்தி. மீண்டும் பையா போல ஒரு அதிரடி உருவாகலாம் என்கிறது கோடம்பாக்கக் குருவி!

Tidak ada komentar:

Posting Komentar