Kamis, 02 September 2010

முடிந்துவிட்ட தனுஸ் படங்கள்

வாடி வாசலை திறந்துவிடுவாங்களா என்று வரிசையா நிற்குது காளைகள். ஆனால் எந்த காளை முந்தி வரும் என்பது தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். காளைக்கும் தனுஷ§க்கும் என்ன சம்பந்தம்? நாம்
சொன்ன காளைகள் எல்லாம் தனுஷ் நடிக்கும் படங்கள்தான்.
உத்தம புத்திரன், மாப்பிள்ளை, சீடன், ஆடுகளம் ஆகிய அத்தனை படங்களும் முடிந்துவிட்டன. பின்னாலேயே வந்த செல்வராகவன் கூட மாலை நேரத்து மயக்கம் படத்தை முக்கால் வாசி முடித்து விட்டாராம். (பார்றா) இந்த நேரத்தில் தனுஷ்ஷை முதலில் நடிக்க வச்சது நாங்கதான். எங்க படம்தான் முதலில் வரணும் என்று போட்டி போட ஆரம்பித்திருக்கிறார்கள் பணம் போட்ட முதலாளிகள்.
நடிக்கறதோட என் வேலை முடிஞ்சுது. ரிலீஸ் செய்யுற வேலை உங்களுடையது. நம்மள ஆட்டத்துல சேர்க்காதீங்கய்யா என்கிறாராம் தனுஷ். எல்லாருமே எங்க படம்தான் முதலில் வரணும் என்று கைது£க்கி கோஷம் போட காத்திருப்பதால் இன்னும் சிறிது நாளில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்கிறது கோடம்பாக்கத்து குருவி.

Tidak ada komentar:

Posting Komentar