Sabtu, 18 September 2010

காவலன் படத்தில் ஜோடி விஜய்யுடன் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி – அசின்


“காவலன்” படத்தில் விஜய், அசின் ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்று விஜய் பேசியதாவது:-
இந்த படத்தின் கதையை இருவருடங்களுக்கு முன்பே சித்திக் என்னிடம்
சொன்னார். எனது வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்ட கதை. இது காதல் படம். ஆக்ஷன், காமெடியும் இருக்கும்.
இந்த படத்துக்கு டைட்டில் பெரிய பிரச்சினையாக இருந்தது. காவல்காரன் என்ற பெயர் வைக்க நினைத்தோம். ஒரு சில காரணங்களால் அது முடியவில்லை. இடையில் காவல் காதல் என்ற பெயரை யாரோ பரப்பிவிட்டனர். கடைசியில் காவலன் என்ற பெயர் அமைந்துள்ளது.
சித்திக்குடன் ஏற்கனவே பிரண்ட்ஸ் படத்தில் சேர்ந்தேன். அதில் வரும் காமெடியை இன்னும் மறக்க முடியவில்லை. குறிப்பாக வடிவேலு தலையில் சுத்தியல் விழும் சீனை இப்ப பார்த்தாலும் சிரிப்பேன்.
அசின் இந்த படத்தில் என்னுடன் சேர்ந்து நடிப்பது சந்தோஷம். ஏற்கனவே சிவகாசி, போக்கிரி படங்களில் சேர்ந்து நடித்தோம். இது எங்கள் கூட்டணியில் மூன்றாவது படம். கடந்த இரு படங்களை போலவே இதுவும் வெற்றி பெரும்.
படப்பிடிப்பு இடையில் அசின் இந்தி படத்துக்காக போய்விட்டார். இரு மாதங்களை வீணாக்க வேண்டாம் என கருதி ”வேலாயுதம் படத்திலும் நடித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அசின் பேசியதாவது:-
தமிழ் படங்களை ஒதுக்கிவிட்டு நான் இந்திக்கு போகவில்லை. நல்ல கதைக்காக காத்திருந்தேன். “காவலன்” படத்தில் எனக்கு வலுவான கேரக்டர் விஜய் படங்களில் இது வித்தியாசமான படமாக இருக்கும். மலையாளத்தில் இந்த படத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். அவர் ஸ்டைலில் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இதில் என் பாணியில் நடிப்பேன். விஜய்யுடன் மூன்றாவது முறையாக இப்படத்தில் நடிப்பது மகிழ்ச்சி இந்த படம் எங்கள் கூட்டணியில் ஹாட்ரிக் வெற்றியாக அமையும். வடிவேல், இயக்குனர் சித்திக், தயாரிப்பாளர் ரமேஷ்பாபு, ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், மக்கள் தொடர்பாளர் பி.டி. செல்வகுமார் ஆகியோரும் இதில் பங்கேற்று பேசினர்.

Tidak ada komentar:

Posting Komentar