Kamis, 02 September 2010

விபசாரத்தில் சிக்கிய நடிகைகள் சினிமாவில் நடிக்க தடை


விபசாரத்தில் சிக்கிய நடிகைகள் சினிமாவில் நடிப்பதற்கு தடை விதிக்க நடிகர் சங்கம் முடிவு
செய்துள்ளது. விபசாரம் செய்யும் நடிகைகளால் திரையுலகின் பெயர் கெட்டுப்போய் விடும் என்றும் நடிகர் சங்கம் கூறியுள்ளது. தெலுங்கு சினிமா நடிகைகளான சாய்ரா பானு, ஜோதி ஆகியோர் சமீபத்தில் விபசார வழக்கில் கைதானார்கள். தங்களை திட்டமிட்டு யாரோ சிக்க வைத்திருக்கிறார்கள் என்று கண்ணீர் வடித்த நடிகைகள், தாங்கள் குற்றமற்றவர்கள் என்றும் வாதிட்டு வருகிறார்கள்.
விபசார வழக்கில் சிக்கிற 2 நடிகைகளுக்கும் சினிமாவில் நடிக்க தடை விதிக்க நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது. தெலுங்குப் பட தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் விபசார வழக்கில் கைதான நடிகைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.இல்லாவிட்டால் இவர்களால் தெலுங்குத் திரையுகின் பெயர் கெட்டுப் போய் விடும் என சில தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதையடுத்து அவர்களுக்குத் தடை விதிக்க தெலுங்கு நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.

Tidak ada komentar:

Posting Komentar