Sabtu, 04 September 2010

வழியும் சின்னத்தளபதி

Bharath
பிடிச்சவங்களா இருந்தா பிளாஸ்ட்டிக்கில் ஒரு தாஜ்மஹால் பொம்மையாவது வாங்கிக் கொடுத்து இன்புறுவது ஜொள்ளர்களின் வழக்கம். ஆனால் தனது அன்பை நோட்டீஸ் அடித்து கொண்டாடியிருக்கிறார் நடிகர்
பரத். பணம் கொடுத்த மனுஷனுக்கு பார்வைக்கு இதமா இருக்குமேன்னு அந்த போஸ்டரை அவர் வீட்டு சுவற்றிலேயே ஒட்டி ஆட்டத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள் அந்த அப்பாவி பசைத் தொழிலாளிகளும்.
கொஞ்சம் விளக்கமாக பார்ப்போமா? சிம்புவின் ஃபேவரைட் சனாகான் பரத்துடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார். சமீபத்தில் சனாவின் பிறந்த நாள் வந்தது. அவருக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்று நினைத்த பரத், சர்ப்பிரைசாக இருக்கட்டுமே என்று பல வண்ணங்களில் போஸ்டர் அடிக்க உத்தரவிட்டாராம். எல்லாவற்றிலும் அகில இந்திய சனாகான் ரசிகர் மன்றம் என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.
காலையில் கண் விழித்து பார்க்கும் சனாவுக்கு இந்த போஸ்டர் இன்ப அதிர்ச்சியை தரும் என்பது பரத்தின் பக்கா பிளான். நினைத்த மாதிரியே அது வொர்க் அவுட் ஆனது தனிக்கதை. ஆனால் இந்த போஸ்டரில் பலவற்றை பரத் வீடு அமைந்திருக்கும் சூளைமேட்டை சுற்றி சுற்றியே ஒட்டி விட்டார்கள் இந்த தொழிலாளிகள். நான் இல்லே நான் இல்லே என்று பரத் வழிந்தாலும், வழியாத பசை சொல்கிற சேதி வேறுதான்!

Tidak ada komentar:

Posting Komentar