Sabtu, 04 September 2010

நயன்தாராவின் அதிரடி

Nayanthara
தீபாவளி நெருங்க நெருங்க பல நடிகைகளின் மனசில் பட்டாசு சப்தம். வேறொன்றுமில்லை, இது கரன்ஸி வெடி. தி.நகரில் உள்ள பிரபல நிறுவனங்கள் பிரஷ்ஷாக படம் எடுத்து வருகிறார்களாம். தமன்னா, த்ரிஷா,
அனுஷ்கா என்று அன்றலர்ந்த தாமரைகள்தான் இந்த விளம்பரங்களில் நடிக்க புக் ஆகியிருப்பவர்கள். இவர்களில் ஆரம்பத்தில் ஒரு முடிவெடுத்த நயன்தாரா நடுவில் லேசாக சறுக்கி பின் ஆரம்ப முடிவுக்கே போய் விட்டார். அதாவது விளம்பர படங்களில் நடிப்பதில்லை என்று.
ஜவுளிக்கடை விளம்பரங்களை விடுங்கள். நகைக்கடை விளம்பரத்திற்கு கூடவா தலை காட்டக் கூடாது என்று கோரிக்கை வைத்த சில சொர்ணவான்களுக்கு நயன்தாரா சொன்ன பதில் ரொம்ப வேடிக்கையானது. நான் எப்பவாவது நகைகள் போட்டு பார்த்திருக்கீங்களா? எனக்கு தங்க நகைகளை பிடிக்காது. அந்த பழக்கத்தை விட்டு பல வருஷம் ஆச்சு. படங்களில் வேறு வழியில்லாமல் அணிய வேண்டியிருக்கு. நானே செய்யாத ஒரு விஷயத்துக்கு எதுக்காக நான் மாய்ஞ்சு மாய்ஞ்சு விளம்பரம் செய்யணும் என்றாராம்.
ஃபேன் இல்லாத ஊருக்கு ஒரு விசிறி மட்டை கூடவா கிடைக்காது. சொர்ணவான்கள் இப்போ வேறொரு நடிகையின் வீட்டில்!

Tidak ada komentar:

Posting Komentar